மலையக சிறுதெய்வ வழிபாடும் சுடலைமாடன் சடங்கும்
இக்கட்டுரையின் எழுத்துருவாக்கத்திற்கான காரணகர்த்தா...திரு. செ.ரஜீவ் - தலைவர்....BFA in drama and theatre...M.phil in philosophy அடையாளம் அரங்கம் சுடலைமாடன் சடங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படம்
மலையகம் தொடர்பான ஆயிரக்கருக்கள் இன்று பேசப்படும் சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட இச் சிறு தெய்வ வழிபாட்டினை மாத்திரம் கருவாகக் கொண்டு கட்டுரையினை எடுத்து உருவாக்கம் செய்வதற்கு முக்கிய காரணமும் உண்டு. மலையகம் 200 என்ற மையக்கரு ஆரம்பித்த விளிம்பு நிலையிலிருந்து பல்வேறு நடவடிக்கைகள் கருத்தாடல்கள் கலந்துரையாடல்கள் நிகழ்நிலை கருத்தரங்குகள் மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பங்களில் வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கை வாழ் மக்கள், இலங்கையில் காணப்படும் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆசிரியர்கள் ,அரங்க செயற்பாட்டாளர்கள் போன்றோரின் வழிகாட்டல்களுக்கு ஊடாக மலையக மலையக மக்களின் வருகை, வளர்ச்சி, தோற்றம் என்ற படிநிலைக் கூடாக இன்றைய காலகட்டத்தின் தேவை வரை பல்வேறு கருத்தாடல்கள் இடம் பெற்றது. இக்கருத்தாடல்களில் இன்றைய காலத்தில் மறவி வருகின்ற இச் சிறு தெய்வ வழிபாடு பற்றி ஆசிரியர் மற்றும் அரங்க செயற்பாட்டாளர் செல்வராஜ் ரஜிவ் ( அடையாளம் அரங்கம்) அவர்களின் கருத்தாடல் ஆனது மலையக சிறு தெய்வ வழிபாட்டினை எழுத்து உருவாக்கம் செய்வதற்கு என்னை வழிக்காட்டியது. இக்கலந்துரையாடலினை அடிப்படையாகக் கொண்டு மூத்தோர்களின் கருத்துக்களையும் உள்வாங்கி அனுபவப் பகிர்வுகளை அடையாளப்படுத்தும் முகமாக மலையக சிறு தெய்வங்கள் பற்றிய விபரங்கள் இக்கட்டுறையில் எழுத்து உருவாக்கம் பெறுகின்றது.
இயற்கை தெய்வ வழிபாடு நீர் நெருப்பு வானம் காற்று மண் இவற்றோடு தொடர்புடையதாகும்.
சமூக ஒரு சமூகத்தின் உடைய அல்லது ஒரு இன குழுமத்தின் உடைய துன்பத்தை இயற்கையோடு இயல்பாக வாழும் வாழ்க்கையினை இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழி மக்கள் கையில் எடுத்துள்ளனர் எனலாம் . அதனை மறுதலிக்காமல் அதனை நீடித்து இன்பம் காணுகின்றார்கள். இயல்பான உணவு ,இறைவனோடு நேரடியாக உரிமைக் கொண்டு உறவாடுதல், தரகர் இன்றிய வழிபாடு போன்றவற்றின் ஊடாக தம்முடைய பிரச்சினைகளுக்கு தாமே தீர்வு காணும் ஒரு வழிப்பாடாகவும் இதனை நாம் அடையாளப்படுத்தி கூற முடியும்.
மலையக சிறு தெய்வங்களை எடுத்துக்கொண்டோம் ஆனால் பெண் தெய்வங்கள் மற்றும் ஆண் தெய்வங்களும் காணப்படுகின்றன முனி, ரோதமுனி, கவ்வாத்து சாமி, மலைச்சாமி, காளியை அம்மா காடேரி, வேட்டை கருப்பு, கொய்நூறான், அஞ்சு முனியாண்டி, மகாமுனி, மாடன், மருத வீரன் போன்று பல்வேறு சிறு தெய்வ வழிபாடுகள் பல்வேறு பட்ட பிரதேசங்களில் வழிபாட்டிற்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். தெய்வங்களின் வழிபாட்டினை சடங்கு ரீதியாக நோக்கும் போது சிறிய பூஜை பலி கொடுக்கும் நிகழ்வு அதாவது ஆண்கள் மாத்திரம் அதிகளவாக பங்கு கொண்டு சமைத்து இறைவனுக்கு படைத்து தானும் பிரசாதமாக உண்டு வருவது வழக்கமாக உள்ளது ஆனால் மலையகத்தில் காணக்கூடிய இச்சுடலை மாடன் சடங்கானது ஏனைய சிறு தெய்வ வழிபாடு மற்றும் சடங்குகளில் இருந்து வேறுபடுவதோடு ஆழமானதாகவும் காணப்படுகின்றது எனலாம். அதே நேரத்தில் இதனுடைய துன்பத்தினை அல்லது மரபை ஆழமாக பார்க்கும்போது சங்ககாலத்தில் இருந்து மீண்டும் இக்காலத்தின் சடங்கு தன்மைகளை ஆய்வுக்குட்படுத்தி பார்க்கக்கூடிய ஒரு பொதுநிலை காணப்படுகின்றது எனலாம் . காரணம் சங்ககாலத்தில் காணக்கூடிய கண்டு வழிபாடு அல்லது நடுகல் வழிபாட்டில் இருந்து இறந்தோரை வழிபடக்கூடிய அல்லது ஆவி உலக வழிபாடு குலதெய்வ வழிபாடு போன்ற தன்மைகளில் இருந்து இச்சுடலை மாடன் சடங்கு காணப்படுகின்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் திருநெல்வேலி பகுதிகளிலிருந்து இலங்கைக்கு புலம்பெயர்ந்த கூலித்தமிழர்களில் ஒரு இனக் குழுமத்தின் உடைய ஒரு சடங்கு அல்லது வழிப்பாடாகவும் ஆற்றுகை நிகழ்வாகவும் நம்பிக்கையின் இருப்பாகவும் இருக்கக்கூடிய விடயமாக இச்சுடலை மாடன் சடங்கு காணப்படுகின்றது. கண்டி பன்விலை பிரதேசத்தில் மடகளைப் பிரிவில் இச் சுடலை மாடன் வழிபாடானது மிக விசேஷமாக பூஜிக்கப்பட்டு வருகின்றது. மூன்று நாட்கள் வழிபாட்டினை கொண்ட இச்சுடலைமாடன் சடங்கானது கிரேக்க துன்பவியல் நாடகம் tragedy தரக்கூடிய ஒரு பயத்தையும் கழிவிறக்கத்தையும் ஏற்படுத்தக் கூடிய இரு நிகழ்வுகளை உள்ளடக்கியதாக உள்ளது. சுடலை மாடன் சடங்கின் முதல் நிகழ்வு கம்பம் நடுதல்,
கரகம் பாவித்தல் போன்ற நிகழ்வுகளோடு ஆரம்பிக்கப்பட்டு இது மூன்று வித திட்டமிடங்களுக்கு ஏற்ப அமைகின்றது. முன் ஆயத்த நிலைகள் சடங்கின் போதுமான செயற்பாடுகள் ஒரு வாரத்திற்கு பின்னரான செயல்பாடுகள் என்பவை யாவும் முன்னாயத்த நிலையில் வில்லடித்தல் காணப்படுகின்றது. இந்த வில்லடித்தல் செயல்பாடு ஆனது மடகலை பிரிவு ,லெபனன்தோட்டம், மஸ்கலியா பிரதேசம், ரத்தினபுரி பிரதேசம் போன்ற பிரதேசங்களில் இன்றும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. வில்லடித்தல் ஒரு வாரத்திற்கு முன்னரே பயிற்சிகள் வழங்க இடம் பெறுகின்றன. சுடலை மாடன் களையாடுபவர் ஊருக்குள் களையாடி வருதல், நோய்கள் தீர்க்கும் தன்மை போன்ற நம்பிக்கைகளை இது தன்னகத்தை கொண்டு இருக்கின்றது. சுடலைமாடன் தெய்வத்திற்குரிய ஆலயமானது திறந்தவெளியில் நடுநிலை கொண்டதாக காணப்படும் பிரதானமாக கடவுளாக சுடலை மாடன் சுற்றமெங்கிலும் காளியம்மாள், மாரியம்மாள், கருப்பன் சாமி, முனியாண்டி, முனி, நொண்டி மாடன், சாம்பல் மாடன் என்று பல்வேறு சிறு தெய்வங்கள் நடுகல் வழிபாடு காணப்படுகின்றன. (நடுகல் மற்றும் என்பதற்கு விளக்கத்தைப் பெற்றுக் கொள்வோமாயின் இந்தியாவிலிருந்து கூலி தமிழர்களாக படம் பெயர்ந்தவர்கள் தங்களுடைய குலதெய்வத்தினுடைய பிடி மண்ணை எடுத்து வந்து இம்மண்ணில் தங்கள் குல தெய்வத்துக்குரிய இடமாக ஒதுக்கி நடுகல்நாட்டி வழிபட்டு வந்தன இதனையே பிடிமண் என்றும் நடுகல் வழிபாடு என்றும் குறிப்பிடுவர்.)
கரகம்பாளித்தல்
மாலை நேரங்களில் கரகம் இடம்பெறும் . குறிப்பிட்ட பிரதேசத்தில் மழை உச்சியில் காணப்படக்கூடிய ஒரு ஆற்றில் இக்கரகம் பாளித்தில் சடங்கு இடம்பெறும்.கரகம் பாளித்து ஆலயத்திற்கு வரும் பாதையில் சக்தி பாடல்களும் தாலாட்டு பாடல்களும் மாடன் அழைப்பு பாடல்களும் பாடப்பட்டு வரும்.( இந்த ஊர்வலம் எனும் பதமானது கிரேக்க மொழி சொல் கிடைக்கப்பெறுகின்றது). முழுமையான இருளில் பந்தத்துடன் பிரதான கலை ஆடுபவருடன் பாடப்படும்.
இரண்டாம் நாள் வில்லடித்தல் பாடப்படும் ,பலி கொடுத்தல் பின்னர் காலி கருப்பன் சுற்றி இருக்கும் எல்லா நடுகல் தெய்வங்களுக்கும் அந்தந்த குழுமம் சார்ந்தவர்கள் உயிர்ப்பலி கொடுப்பர்.
பாரம்பரிய கலை வடிவமாக நோக்கக் கூடிய இவ்வுலடித்த நிகழ்வில் உடுக்கை படம் உருமி டோல் கி தபேலா மேலும் போன்ற இசைக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வரும் வில்லடித்தல் பாடல்கள் அமையப்பெற்றிருக்கும் இப்பாடல்களில் சுடலை மாடனின் வாழ்க்கை பார்வதி சிவனிடம் படி அளந்த கதை போன்றவற்றினோடு மையப்படுத்தியதாக அமைந்திருக்கும்.
தம்மை நிரூபிப்பதற்காக பிணங்களின் குடலை மாலையாக போட்டு ஆடி வருதல் பின்பு கட்டளைக்குட்பட்டு அல்லது நிபந்தனைக்குட்பட்டு அதனை தவிர்த்து ஆடி வருதல் குறி கேட்டல் இறுதிநாள் பலி கொடுத்தல் அன்னதானம் மஞ்சள் நீராடுதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இச்சொடரில் மாடன் சடங்கானது இன்றும் பல்வேறு பட்ட பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மாடன், மாடசாமி,சுடலைமாடன் எனும் சொற்கள் முக்கியமானவை. மாடன் எனும் சொல் மாட்டைக் குறிக்கின்றதா? / மாட்டை மேய்த்து அம்மாடுகளைக் காத்த ஒரு தலைவனைக் குறிப்பிடுகிறதா? சுடலையோடு மாடனைச் சேர்த்தல் முன் நடந்ததா? / பின் வந்ததா? இவற்றை மானிடவியல் கூறும் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்பது இன்னும் சிந்தனையை அகட்டும் மாடன் பற்றி ஒரு தொன்மம் உண்டா? / பல தொன்மங்கள் உண்டா? என்பதைத் தொன்மவியல் பின்னணியில் பார்க்கலாம். சுடலைமாடன் சடங்கில் பாவிக்கப்படும் குறிகளை குறியீட்டு முறையில் பார்க்கலாம். இன்று இந்தப் பழைய வழிபாடு நிலவுகிறதென்றால் அதற்கான சமூக உளவியல் காரணங்கள் என்ன என்றெல்லாம் ஆராய்வது சுடலைமாடன் வழிபாடு பற்றி அறிய மேலும் உதவும் சுடலை மாடன் சடங்கினைச் சடங்காக ஆற்றுகையாக வாழ்வாக அணுகுதல் ஒருமுறை அதனை புறநிலை நின்று ஆய்வாக அணுகுதல் இன்னொரு முறை.
சுடலைமாடன், அர்ஜுணன் தபசு, காமன் கூத்து போன்ற சடங்குகள் முழு மலைநாட்டிற்குரியது அல்ல.குறிப்பிட்ட ஒவ்வொரு சமுகத்திற்குரியது. எனவே,நாம் இவற்றை மலையகத்தின் சடங்காக இல்லாமல் பல சடங்குகளில் இதுவும் ஒன்று என கருத்திற்கொண்டு அதனுடைய சமூக பின்னணி பற்றி ஆராயவதன் மூலம் இச்சடங்குகளின் ஆழத்தையும் தார்பரியத்துயும் அறிந்துக்கொள்ள முடியும்...
மக்களையும் "தெய்வங்களையும் தனித்தனியே பிரித்துப் பார்க்க முடியாது"(T.தர்மலிங்கம்) என்பர். தெய்வங்கள் என்பது மக்கள் மூலமே உணரப்படுகின்றது மக்களின் பண்பாட்டுச் சிந்தனை ஆகியவற்றோடு ஆழமான தொடர்புடைய தெய்வம் தெய்வங்களின் பன்முக பரிமாணங்களை முழுமையாக புரிந்து கொள்வதும் விளங்குவதும் இலகுவானது ஒன்று அல்ல .அதாவது பிறப்பு முதல் இறப்பு வரை மனிதன் தெய்வங்களோடும் தெய்வ மனிதர்களோடும் கொள்ளும் உறவு முறை ஆவியுலக வழிபாடு என மானுடவியலின் ஊடாக கூறலாம். இது பல்வேறு காலகட்டங்களில் கடந்து வந்து புராண இதிகாசம் போன்றவற்றிலிருந்து வெளிக்காட்டப்படுகின்றது.
அ.ரஞ்சிதா ( diploma in teaching )
செயலாளர் (அடையாளம் அரங்கம் )
கலமுதுன தமிழ் வித்தியாலயம்.
ranjithaaiyakannu14@gmail.com
0 Comments