அனைத்து பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் மே மாதம் 05 மற்றும் 06ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், எதிர்வரும் மே மாதம் 07ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments