GCE (O/L) பரீட்சை பிற்போடப்பட்டது; GCE (A/L) இவ்வருடம் இடம்பெறும்
2022ஆம் ஆண்டு நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த
க.பொ.தர சாதாரதர பரீட்சை பிற்போடப்படுவதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
அதற்கமைய, குறித்த பரீட்சையானது 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறுமெனவும் கல்வியமைச்சர் தெரிவித்தார்.
அதேபோல் இவ்வாண்டுக்கான (2022 A/L Batch) கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை எதிர்வரும் ஒக்டோபர் அல்லது நவம்பரில் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

0 Comments