2022 ம் ஆண்டுக்கான GCE AL பரீட்சையை ஒத்தி வைக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தரப்பிலிருந்து பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன..
இறுதியாக வெளியாகிய பரீட்சையை எதிர்கொண்ட மாணவர்கள் மீண்டும் அடுத்த பரீட்சைக்கு தோற்றுவதற்கு மூன்று மாத காலப்பகுதி மட்டுமே இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது..
2022 ஆம் ஆண்டு உயர்ததரப்பரீட்சைக்கான சரியான திகதிகள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் தீர்மானிக்கப்படுத்து அறிவிக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜேந்த தெரிவித்தார்.அததோடு தேசிய பாடசாலைக் கொள்கை இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர் பரீட்சைகள் திணைக்களத்துடன் கலந்துரையாடி இது தொடர்பான ஒரு முடிவுக்கு வருவதாகவும் மாணவர்களுக்கு சார்பாக முடிவை பெற்றுக் கொடுப்பதே தன்னுடைய நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்..
எனவே பரீட்சை ஒத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே காணப்படுகின்றது.. இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் பரிட்சைகள் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட பின்னரே இந்த செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்..
0 Comments